பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பட்டயம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பப் பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 22 உடன் முடிவுற்ற நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு ஏப்ரல் 22ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு மார்ச் 22ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மே 6ம் தேதி வரையில், நுழைவுத்தேர்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அப்பல்கலைக் கழக துணை வேந்தனர் குர்மீத் சிங் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் 0413- 2654500 மற்றும் 06382349524 ஆகிய உதவி எண்ணிற்குத் தொடர்புகொள்ளலாம். அல்லது admissions.pu@pondiuni.edu.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மாணவர்கள் தங்களது சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பத்தை www.pondiuni.edu.in என்ற புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications












